Monday, August 8, 2011

சனல்-4 ஆவணப்படமும் சந்திரிகாவின் மகனும்...

'செம்மணிப் படுகொலைகள் இடம்பெற்ற காலத்தில் கமராவுடன் கூடிய கைப்பேசிகள் இருந்திருக்குமாயின் சந்திரிகா குமாரதுங்கவையும் அம்மா என்று சொல்ல வெட்கப்படுகின்றேன் என லண்டனிலுள்ள அவரது மகன் கூறியிருப்பாரா?"

Sunday, August 7, 2011

கூட்டமைப்பின் அதிரடி அறிவிப்பு அரசுக்கு அதிர்ச்சி வைத்தியம்


அரசாங்கப் பிரதிநிதிகளுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளுக்கம் இடையிலான பேச்சுக்கள் கடந்த வியாழக்கிழமை மாலை ஆரம்பமானபோது வழக்கம் போல எல்லாம் சுமூகமாகத்தான் இருந்தது. பாராளுமன்றத் தெரிவுக்குழு என்ற விடயத்தில் அரச தரப்பின் அக்கறை இப்போது அதிகமாக இருப்பதால் அதற்கான ஆதரவைப் பெறுவது அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலில் முக்கியமாக இருந்தது. அரச தரப்பினர் அது தொடர்பாக விளக்கிக் கூறிக்கொண்டிருந்தார்கள். பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் நம்பிக்கை இல்லை என்பதை ஏற்கனவே தெளிவுபடுத்தியிருந்த கூட்டமைப்பின் பிரதிநிதிகள் அரசாங்கத் தரப்பு முடிக்கட்டும் என பொறுமையாக இருந்தார்கள்.