Sunday, August 29, 2010

திருப்பத்தை ஏற்படுத்திய முடிவு


சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இறுதியாக அரசாங்கத்துக்கு ஆதரவளிப்பது என்ற நிலைப்பாட்டை எடுத்திருக்கின்றது. இதன் மூலம் அரசியலமைப்புத் திருத்தத்தை மேற்கொள்வதற்குத் தமக்குத் தேவையாக இருந்த மூன்றில் இரண்டு பெரும்பான்மையை அரசாங்கம் பெற்றுக்கொண்டுவிட்டது.
அடுத்ததாக அரசியலமைப்புக்கான திருத்தம் செப்டம்பர் முற்பகுதியில் பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்படும்.